Friday, November 20, 2009

Sri Lanka (2009)



சினிமாவைத் தவிர.. சென்ஸிடிவான... விஷயங்கள் எதுவும்..,  இனிமேல் தொடக் கூடாதுன்னு, கொஞ்ச நாள் முன்னாடி முடிவு பண்ணியிருந்தேன். ஆனாலும்.. இந்த விஷயம் என்னை.. ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. நீங்களும் இதை கவனித்திருக்கிறீர்களா, என்ன நினைக்கறீங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான் இந்தப் பதிவு.


அலெக்ஸா ரேட்டிங் பத்தி ,சங்கர் எனக்கு சொல்லும்போது... என் ப்லாக் 600K சம்திங். 300K-வில் இருக்கும் போதுதான்.. hollywoodbala.com (செப்டம்பர்) ரெஜிஸ்டர் பண்ணினேன். அது திரும்ப 2-3 மில்லியனில் இருந்து ஆரம்பித்தது. மேட்டர் அதுவல்ல.

அந்த அலெக்ஸா ரேட்டிங்கில்.. சைட்டின் பெயர் வாங்கும் முன்.. ஜூன் மாதத்தில்... இலங்கையில், இந்த ப்லாக் ரேங்க், 1000-க்கும் கம்மி. புது அட்ரஸ் வாங்கியப் பின், இது திரும்பவும்.. 10K -க்கு மேல் ஆரம்பித்து... 2k-3K-வில் இருந்தது.

அப்பொழுது கேபிளின் இலங்கை ரேங்க் 2K..., லக்கியின் ரேங்க் 9K (லோஷனின் ரேங்கை பார்க்கவில்லை). இலங்கைக்கு எதிரான இந்த ரேங்க் எல்லாம் திடீரென... போன 2-3 மாதங்களில்... பாதாளத்திற்கு போக ஆரம்பித்தது.

இலங்கையின் பெயர், முதலில் லக்கியின் அலெக்ஸா லிஸ்டில் மறைந்தது. அடுத்து என்னுடையது. அடுத்து கேபிள்.  இந்த மூன்றையும் ஒரு சேம்பிளுக்குத்தான்... அவ்வப்போது கவனித்து வந்தேன். அதுவும்.. மற்ற நாடுகளின் ரேங்க் பட்டியல் 10k-20k என ஒரு வாரத்தில் குறையும் போது... இலங்கை மட்டும்.. எப்படி அதிகரிக்கிறது? பின் காணாமல் போகிறது??

இந்தப் பதிவை எழுதும் முன்... ரேண்டமாக.. எனக்குத் தெரிந்த பல பிரபலங்களை அலெக்ஸாவில் பார்த்த போது, லோஷனைத் தவிர வேறு யாருக்கும்... இலங்கையின் பெயர் லிஸ்டில் இல்லை. இது யாருக்காவது உறுத்தியதா? என்ன காரணம் என யாருக்காவது தெரியுமா? அலெக்ஸாவில் இலங்கையின் பெயர் மறையும் மாயத்திற்கு.. டெக்னிகலாக வேறு ஏதாவது காரணங்கள் உண்டா?


இந்த ப்லாகை ஆரம்பத்தில் இருந்து படிப்பவர்களுக்கு ‘சுபாஷை’ கண்டிப்பாக தெரிந்திருக்கும். சரியாக போன ஜூன் 30, 2009 அன்று ஒரு பதிவை அவரது ப்லாகில் போட்டவர், எனக்கு Transformer 2- படத்திற்கு, ஜூலை 1, 2009-ல் பின்னூட்டம் போட்டுவிட்டு போனவர், பின் ஆளையே காணவில்லை.

எவ்வளவு முயற்சித்தும்.., ஈமெயில்கள் அனுப்பியும்.. அதன் பின் பதிலே இல்லை. யாராவது இலங்கைத் தமிழ் பதிவர், ப்லாக் எழுதினால்.. அங்கெல்லாம் போய்.. பதிவை படிக்கிறேனோ இல்லையோ.. சுபாஷின் பெயரை தேடிக் கொண்டே இருக்கிறேன். ‘அண்ணா’ என கனகுவோ.. மற்றவர்களோ பின்னூட்டம் போடும்போதெல்லாம்..., சுபாஷ்தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்.

இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பதிவு பப்ளிஷ் பண்ணும்போதும், ஷண்முகப்ரியன் சாரின் பின்னூட்டதைப் போலவே, நான் எதிர்பார்ப்பது, இவர் வந்து பின்னூட்ட மாட்டாரா என்பதுதான். ஒருவேளை கிஷோரோ, பப்புவோ, வினோத்தோ கூட... பின்னூட்டம் போடவில்லை என்றாலும்... அவர்கள் “இலங்கையில் இல்லை” என்ற நிம்மதி.

உங்களுக்கு சுபாஷ் எங்கே இருக்கிறார் எனத் தெரிந்தால், ஐந்து மாதங்களாக நான் அவரை தேடிக் கொண்டிருக்கிறேன் என சொல்ல முடியுமா? இப்படி கேட்கவே எனக்கு அசிங்கமாய் இருக்கிறது. ஒரு நாட்டின் நிலைமையை, அலெக்ஸா ரேட்டிங்கை வைத்தும், ஒரு உயிரின் நிலைமையை எனக்கு வரும் பின்னூட்டத்தை வைத்தும் தெரிந்துகொள்ள முயற்சிக்கும் கேவலமான நிலையா...?


அலெக்ஸா ரேட்டிங் எனக்கு மயிரா போச்சி. அதில் இலங்கையின் பெயரை மட்டும்தான் இன்னொரு முறை எதிர்பார்க்கிறேன். நான் நாத்திகன். ஆனால் சுபாஷ் இங்கே ஒரு பின்னூட்டம் போட, நான் கடவுளை கும்பிட்டால், அதற்கு பெரியார் கோபித்துக் கொள்ள மாட்டார் என நம்புகிறேன்.

எழுதவே கூடாது என சபதமாக நினைத்திருந்தும் பாலவாசகனின் சாபக்கேடை படித்ததும், அடக்க முடியாமல் எழுதிவிட்டேன்... வேறு சாயம் எதையும் பூச மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்!

Read more...